மஹவிலச்சிய பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் கையளிக்கப்பட்டது

மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவின் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் மஹவிலச்சிய பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் சிறுநீரக நோய் நிவாரணம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அநுராதபுர மாவட்ட இணைப்பாளர் முன்னால் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்கள் மற்றும் மஹவிலச்சிய பிரதேச இணைப்புக் குழுவின் இணைத் தலைவர் முன்னால் அமைச்சர் டப்ள்யு.பீ.ஏக்கநாயக்க அவர்களின் கரங்களால் 2018.10.23 ஆம் திகதி மக்கள் கையளிக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதியின் கருத்திட்ட பிரகாரம் இலங்கையினுல் நீண்ட காலமாக காணப்படும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவால் செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அமைக்கும் இந்த மகத்தான சமூக நலச்செயற்பாடு 2015 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
மஹவிலச்சிய பிரதேச தலைமை மதகுரு கௌரவ பேமடுவே சுமங்கல தேரர் அவர்கள், மஹவிலச்சிய பிரதேச செயலாளர் திரு ஈ.ஆர்.திலகரத்ன அவர்கள், கடற்படையின் லுதினன் ஹேரத், மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.















