குறைந்த வருமானமுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்குதல்.
சிறுநீரக நோய் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கீழ் குறைந்த வருமானமுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு நீர் சுத்தீகரிப்பு உபகரணம் வழங்கும் வேலைத்திட்டம் அநுராதபுர மாவட்ட கருத்திட்ட இணைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் துமின்த திசாநாயக்க அவர்களின் தலைமையில் 2019.03.19 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இங்கு குறைந்த வருமானமுள்ள சிறுநீரக நோயாளிகள் 90 பேருக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
'திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு அரச சார்பற்ற பிரிவு நிறுவனத்தை மையப்படுத்தி செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டம்.
திரிபிடகாபிவந்தனா வாரத்தின் நான்காவது தினத்தை முன்னிட்டு 2019.03.19 ஆம் திகதி அரச சார்பற்ற பிரிவு நிறுவனங்களை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் ஒயாமடுவ ரஜரட சனசமூக நிலையத்தை மையப்படுத்தி நடாத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு கிபுல்வெவ ஶ்ரீ தர்மவர்தனா விகாரையின் மதகுரு கலுவச்சிமுல்லே சாரானந்த பிக்கு அவர்கள் கலந்துகொண்டு திரிபிடக தொடர்பில் தர்ம போதனை நடாத்தினார்.
இந்த நிகழ்வுக்கு ரஜரட சனசமூக மையத்தின் போதனாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு பாடசாலை மற்றும் பிரிவெனாவை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகள்

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு 2019.03.18 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் பாடசாலை மற்றும் பிரிவெனா முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரிவெனாவில் கல்வி பயிலும் மாணவ பிக்குகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் திரிபிடக தொடர்பாக தௌவூட்டல் செய்வதற்கு தர்ம போதனை வேலைத்திட்டமொன்று மற்றம் தெளிவூட்டல் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பிரதேசத்தின் விகாரைகளின் மதகுருமார்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.
















